தேடல் தொடங்கியதே..

Thursday 11 July 2013

கீழக்கரையில் ஏழை நோன்பாளிகள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, கோதுமை உள்ளிட்ட 20 மளிகை சாமான்கள் - சமூக ஆர்வலர்கள் பங்கேற்று வழங்கினர் !

கீழக்கரையில் ஏழை நோன்பாளிகள், நல்ல முறையில் நோன்புகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக,  அவர்களின் குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், தேங்காய், இஞ்சி, பூண்டு, மசாலா பொருள்கள்  உள்ளிட்ட 20 மளிகை சாமான்கள் வழங்கப்பட்டது. 

இதற்கான நிகழ்வு நேற்று (10.07.2013) கிழக்குத் தெரு அப்பா பள்ளி எதிரே உள்ள ஹைராத்துல் ஜலாலியா மதரசாவில் நடை பெற்றது. சென்னை நண்பர்கள் குழுவிடமிருந்து பெறப்பட்ட மளிகை பொருள்களை, கீழக்கரையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், ஏழை நோன்பாளிகள்  குடும்பத்தார்களுக்கு வழங்கினர்.



                    

சென்னையில் வசிக்கும் பல்வேறு ஊர்களை சேர்ந்த சகோதரர்களின் அளப்பரிய முயற்சியால், செல்வந்தர்கள், தொழில் ரீதியான நண்பர்கள், கொடை வள்ளல்கள், ஜமாத்தார்கள், சமூக நல விரும்பிகள்,  பொது நல அமைப்பினர் உள்ளிட்டோர்களிடம் இருந்து ஜகாத், சதக்கா போன்றவற்றை பெற்று, தற்போது கீழக்கரை பகுதியில் வாழும் ஏழை நோன்பாளிகள் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

இந்த நண்பர்கள் குழுவினரால், கீழக்கரை மட்டுமல்லாது, கடந்த மூன்று வருடங்களாக சென்னை புற நகர் பகுதி, மதுரை, கம்பம், கல்லிடைக் குறிச்சி, ஆம்பூர் பகுதிகளிலும் ஏழை எளிய மக்கள் சிரமமின்றி நோன்பு நோற்கும் பொருட்டு, அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கீழக்கரை ஜாமியா நகர் பகுதியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. 




தற்போது கிழக்குத் தெரு சுற்றுவட்டார பகுதியில் உள்ள  215 ஏழைக் குடும்பங்களுக்கு, இந்த மளிகைப் பொருள்கள் தரப்பட்டு உள்ளது. இறைவன் நாடினால் இன்னும் சிறப்பாக வரும் காலங்களில் கீழக்கரை நகர் முழுதும் உள்ள ஏழை குடும்பங்கள் கண்டறியப்பட்டு விநியோகம் செய்யப்பட இருப்பதாகவும், இந்த நண்பர்கள் குழுவினர் தெரிவிக்கின்றனர்.  

No comments:

Post a Comment