தேடல் தொடங்கியதே..

Thursday 11 July 2013

கீழக்கரை பள்ளி வாசல்களில் தராவீஹ் தொழுகை - திரளாக பங்கேற்ற இஸ்லாமிய பெருமக்கள் !

கீழக்கரை நகரில் ரமளான் மாதம் துவங்கிய செய்தி தெரிந்ததையடுத்து, அனைத்து பள்ளி வாசல்களிலும், தராவீஹ் எனும் இரவு நேரத் தொழுகைகள் சிறப்பாக ந‌டைபெற்ற‌து. மிகுந்த எதிர்பார்ப்புடன் ரமலான் நோன்பை வரவேற்கும் அக மகிழ்ச்சியில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளாமானோர் திரளாக இரவு நேர தொழுகையில் க‌ல‌ந்து கொண்ட‌னர்.

இடம் : ஓடக்கரைப் பள்ளி, கீழக்கரை 
இடம் : நடுத் தெரு ஜும்மா பள்ளி, கீழக்கரை 
தொழுகை நிறைவடைந்தவுடன், இறைவனை இறைஞ்சிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் தங்கள் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து சலாம் கூறியும், ரமலான் நோன்பு  வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர்.

No comments:

Post a Comment