தேடல் தொடங்கியதே..

Thursday 11 July 2013

கீழக்கரையில் இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து - மின்சார வாரியத்திற்கு தமுமுக நன்றி !

கீழக்கரையில் இன்று (11.07.2013) மாதாந்திர பரமரிப்பு  பணி காரணமாக மின்தடை என்று இணைய தளங்களிலும், அனைத்து பத்திரிக்கைகளிலும் நேற்றைய தினம் செய்தி வெளியானது.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின் முதல் நாள் என்பதால் ஊர் மக்கள் சிறப்பான உணவுகள் ஏற்பாடு செய்யவும் மற்ற ஏற்பாடுகளுக்கும் மின்சாரம் மிக அவசியம் என்பதால் மின்வாரியம் இன்று மின்தடை செய்யாமல் வேறு ஒரு நாளில் மாதாந்திர பணி செய்ய வேண்டுமென தமுமுக,  SDPI, கீழக்கரை சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஏற்று கீழக்கரையில் இன்று அறிவிக்கப்பட்டு இருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் இஸ்லாமிய மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



இது குறித்து தமுமுக நகர் தலைவர் சிராஜீதீன்  அவர்கள் கூறியதாவது,

மேல் குறிப்பிட்ட காரணத்தை மனுவாக எழுதி கீழக்கரை மின்வாரிய அதிகாரியிடம் கொடுத்து வேண்டு கோள் வைத்தோம். அதனை ஏற்று கொண்ட அதிகாரி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். ஊர் மக்கள் பிரச்சனைகளை அறிந்து உடனே நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

எங்கள் வேண்டுகோளை ஏற்று மின்வாரியம் இன்று மின்தடை செய்யாமல் வேரேரு நாளில் மாதாந்திர பணி செய்ய மாற்றியதற்கு மின்வாரிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். மேலும் அனைவருக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்தார். 

பேட்டியின் போது நகர் செயலாளர் பவுசுல் அமீன் ஒன்றிய செயலாளர் சாதிக் மமக செயலாளர் இக்பால் துணை செயலாளர் சலீம் மற்றும் புகாரி PRO கமால் நாசர் மற்றும் அன்பின் அசன் வளைகுடா நிர்வாகி கீழை. இர்பான். உடன் இருந்தனர்

No comments:

Post a Comment