தேடல் தொடங்கியதே..

Monday 14 October 2013

கீழக்கரையில் நாளை (15.10.2013) நடைபெற இருக்கும் 'மழை தொழுகை' அறிவிப்பு - அவசியம் அனைவரும் பங்கேற்க அழைப்பு !

கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை இல்லாததால் கிணறுகள் வற்றி தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய பெருமக்கள் மழை வேண்டி சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். கீழக்கரையில் கடந்த ஆகஸ்டு மாதம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை தொழுகை நடைபெற்றது. அதே போல் சமீபத்தில் பழைய குத்பா பள்ளி ஜமாத் சார்பிலும்  மஹ்தூமியா பள்ளி வளாகத்திலும் மழை தொழுகை நடைபெற்றது.


இந்நிலையில் கீழக்கரை மேலத்தெரு உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கம் (UHMS) சார்பில், மேலத்தெரு ஹமீதியா பெண்கள் விளையாட்டு மைதானத்தில் நாளை (15.10.2013) செவ்வாய் கிழமை காலை 9  மணியளவில் மழை வேண்டி தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அவசியமான தொழுகையில் அனைத்து ஜமாத்தார்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கீழக்கரையில் நடை பெற்ற மழை தொழுகைகள் குறித்த பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.




No comments:

Post a Comment