தேடல் தொடங்கியதே..

Friday 18 October 2013

கீழக்கரை மணல் மேடு கண்காட்சி திடலில் புதிதாக 'ஆம்புலன்ஸ்' வசதி - சுதாரிப்பில்லாமல் இருக்கும் சுகாதார நடவடிக்கைகளை இனி வரும் காலங்களிலாவது செயல்படுத்த வேண்டுகோள் !

கீழக்கரை வடக்குத்தெரு ஜமாஅத் மேற்பார்வையில் நடைபெறும் கண்காட்சி திடலில் சுகாதாரம்,பாதுகாப்பு உள்ளிட்டவைகள் கடந்த சில ஆண்டுகளாக கேள்விக்குறியாகி வருவதாகவும், அவற்றை முறைப்படுத்த சம்பந்தப்பட்ட ஜமாத்தார்கள் முன் வர வேண்டும் என்றும் கீழக்கரையின் சமூக ஆர்வலர்கள் பலர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் கண்காட்சி திடலில் முதல் முறையாக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சுகாதார நடவடிக்கையோ,பாதுகாப்பு அம்சங்களோ ஏற்படுத்தப்படவில்லை.



 குப்பைகளுக்கு நடுவே ஒரு கானா பாடல்...

பட விளக்கம் : மணல் மேட்டில் குப்பைகளை அகற்றக் கோரி, குப்பைகளுக்கு நடுவே அமர்ந்து கானா பாடும் சமூக ஆர்வலர் உஸ்மான் அவர்கள் 





இது குறித்து சமூக ஆர்வலர்  சேகு சதக் இப்ராஹிம் அவர்கள் நம்மிடையே பேசும் போது "ஆம்புலன்ஸ் ஏற்பாடுகளை செய்தமைக்கு நிர்வாகத்திற்கும், கீழக்கரை முஸ்லிம் டிரஸ்டிற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆனால் சுகாதார நடவடிக்கையில் ஏதும் முன்னேற்றம் இல்லை. 

குப்பைகள் பெட்டிகள் முறையாக இல்லாததால் எங்கு பார்த்தாலும் குப்பைகள் நிரம்பி கிடக்கின்றன. இதன் மூலம் நோய் பரவும் வாய்ப்புகள் அதிகம்.

எனவே நிர்வாகம் உடனடியாக அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் கடைகளை வைத்திருப்போர் கட்டாயம் குப்பை பெட்டிகளை ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும். அதே நேரத்தில் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்" என்று தெரிவித்தார். 

இது குறித்து கீழக்கரை ஜின்னா தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர் உஸ்மான் அவர்கள் கூறும் போது "நேற்று மாலை கண்காட்சி திடலுக்கு சென்றேன். எங்கு பார்த்தாலும் குப்பைகள் தான் குவிந்து கிடக்கிறது. பாஸ்ட் புட் கடைகள் அருகில் உள்ள மணல் பகுதிகளில் அமர்வதற்கே அருவருப்பாக இருக்கிறது. 

தின்று விட்டு வீசி எறியும் கோழிக் கழிவுகள் தான் சிதறிக் கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் தான் அதிகமாக வீசுகிறது. மேலும் ஆயிரக் கணக்கானோர் கூடும் இந்த இடத்தில் தீயணைப்பு வண்டி நிறுத்தி வைக்கப்படவில்லை.

மணல் மேட்டில் பாதுகாப்பில்லாமல் உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டர் அடுப்புகளால் தீ பற்றக்கூடிய அபாயம் அதிகமாக இருக்கிறது என ஆயிரம் முறை எடுத்து சொன்னாலும் கேட்பதாக இல்லை.

இனி வரும் காலங்களிலாவது சம்பந்தப்பட்ட ஜமாஅத் நிர்வாகத்தினர், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு முயற்சி எடுக்க வேண்டும்."என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 

No comments:

Post a Comment