தேடல் தொடங்கியதே..

Friday 18 October 2013

கீழக்கரையில் இன்று (18.10.2013) லேசான மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி !

கீழக்கரை நகரில் கடந்த ஓராண்டாக மழை பொலிவு இல்லாத  காரணத்தால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் கிணற்றில் நீர் இன்றி பொதுமகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில், இஸ்லாமிய மக்கள் மழை வேண்டி, சிறப்பு தொழுகையும் நடத்தி, கண்ணீர் மல்க இறைவனை இறைஞ்சினர். கீழக்கரையில் கடந்த இரண்டு நாள்களாக, இரவு நேரங்களில், கண்ணை பறிக்கும் ஒளியுடன் மின்னல் வெட்டியது. 



இரவு 10 மணிக்கு மேல் குளிர்ந்த காற்றும் வீசியது. நேற்று இரவு 10 நிமிடம் லேசான சாரல் மழையும் பெய்தது. வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை 11.45 மணியளவில் 15 நிமிடம் லேசான மழை பொழிவு இருந்தது. இதனால் மழை இன்றி துன்பப்ப்பட்டு வந்த மக்கள், பெரும் மகிழ்ச்சி அடைந்ததோடு, இரு கரம் ஏந்தி, இன்னும் சிறப்பான மழைப் பொழிவினை வேண்டி துஆ செய்தனர். கீழக்கரையில் தற்போது மாலை 5.30 மணி நிலவரப்படி, மிக மெல்லிய தூறலுடன், வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.







தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவ மழை ஓரிரு நாட்களில் முடியவுள்ள நிலையில் வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யும். இறைவன் நாடினால், இந்த காலத்தில் தான் பெரும்பாலும் கடலோரப் பகுதியான, நம் கீழக்கரை அதன் சுற்று வட்டாரங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

படங்கள் : கீழக்கரை முக நூல் நண்பர்கள் 

No comments:

Post a Comment