தேடல் தொடங்கியதே..

Saturday 19 October 2013

கீழக்கரையில் பலத்த இடியுடன் கூடிய மிதமான மழை !

கீழக்கரை நகரில் இன்று (18.10.2013) காலை 11.45 மணிக்கு 15 நிமிடம் லேசான மழை பெய்தது. அதை தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இரவு 9 மணி முதல் மின்னல் வெட்ட துவங்கியது. தற்போது பலத்த இடி முழக்கத்துடன், மிதமான மழை விட்டு..விட்டு பெய்து வருகிறது. இதனால் கீழக்கரை நகரம் குளிர்ந்துள்ளது. இடையே சிறிது நேரம் மின்சாரமும் தடைபட்டது.




கீழக்கரையில் தற்போது மழைப் பொழிவு துவங்கியுள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, சகோதரர்.குத்புதீன் ராஜா அவர்கள் முகநூல் வழியே இறைவனை இறைஞ்சும் வாசகங்கள்..

சகோதரர்.குத்புதீன் ராஜா
கருணைக் கடலே!
எங்கள் கண்ணீரைக் கண்டு
நீ விண்ணைத் திறந்தாய்!
உன் அருளால் எம் மண்ணும் குளிர்ந்தது!
எங்கள் இதயமும் குளிர்ந்தது..!

மழையருள் தந்த
மாட்சிமை பொருந்தியவனே!
இன்றுபோல் உன் அருள் மழையை
அனுதினமும் பெய்வித்து
வறண்டு கிடக்கும் எம் கேணிகளை
நிரப்பமாக்கியருள்வாய் நித்தியமானவனே..!

No comments:

Post a Comment